Home இலங்கை புலிகளுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து: நால்வர் கைது.

புலிகளுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து: நால்வர் கைது.

by admin

தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வௌியிட்ட ஏறாவூரை சேர்ந்த நால்வரை கைது செய்துள்ளதாக பிரதி காவற்துறை மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரவும் அஞ்சலி செலுத்தவும் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், குறித்த நபர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து, மக்கள் மத்தியில் சமய மற்றும் கலாசார ரீதியில் தாக்கம் செலுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளதாக அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

அவர்களுக்கு எதிராக ஏறாவூர் காவற்துறை ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

#தமிழீழவிடுதலைப்புலிகள் #ஏறாவூர்காவற்துறை #கைது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More