Home இலங்கை செம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது

செம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது

by admin

யாழ்ப்பாணத்தில் வியாபார நோக்கத்துடன் சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 3 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கரவெட்டியைச் சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருள், மோட்டார் சைக்கிள் மற்றும் அலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறைஅத்தியட்சகரின் (எஸ்எஸ்பி) வழிகாட்டலில் பிரதான காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான குழுவினரே இந்தக் கஞ்சா கடத்தலை முறிகடித்தனர்.

சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். சான்றுப்பொருள்களும் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. #செம்மணி #கஞ்சா #கைது #போதைப்பொருள் #மோட்டார்சைக்கிள்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More