Home உலகம் கொரோனா முடிவுக்கு வருவது குறித்து கனவு காண தொடங்கலாம்

கொரோனா முடிவுக்கு வருவது குறித்து கனவு காண தொடங்கலாம்

by admin

கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடிவுக்கு வருவது குறித்து உலகம் கனவு காண தொடங்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தொிவித்துள்ளாா்

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இணையவழியில் கலந்து கொண்டு பேசிய போதே அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகளின் முடிவுகள் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளதனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம் என அவா் தொிவித்துள்ளாா்.

அதேவேளை கொரோனா தடுப்பூசி வினியோக நெரிசலில் ஏழைகளையும், ஓரங்கட்டப்பட்டவர்களையும் பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த நாடுகள் மிதித்து விடக்கூடாது எனவும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா். #கொரோனா #உலகசுகாதாரநிறுவனம் #தடுப்பூசி #கனவு

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More