Home இலங்கை சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட பகுதியை அகற்றிய வீதி அபிவிருத்தி அதிகார சபையினருடன் முறுகல்

சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட பகுதியை அகற்றிய வீதி அபிவிருத்தி அதிகார சபையினருடன் முறுகல்

by admin

காரைதீவு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட மாளிகைக்காடு  ஒரு பகுதியில்  பிரதான வீதியில்  கட்டிடத்தின் ஒரு பகுதியில்   சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட பகுதி ஒன்று  வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அகற்றும் போது  பதற்ற நிலை ஏற்பட்டது.

 வெள்ளிக்கிழமை(18)  குறித்த கட்டட  காணிக்கு மேலதிகமாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பகுதியில் நிர்மாணம் மேற்கொண்டு இருந்ததுடன் இவற்றை அகற்ற வந்த அதிகார சபை உத்தியோகத்தர்களுக்கு  இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனால் பிரதான வீதியில் பொதுமக்கள்  கூடியதுடன்   சுகாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனை அறிந்து  காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி   ஜீவராணி சிவசுப்பிரமணியம் களத்துக்கு நேரில் வந்து சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தை   வலியுறுத்தினார்.

ஆயினும்  கட்டடத்தின் நடத்துநர் அநாகரீக   வார்த்தைகளால் சுகாதார வைத்திய அதிகாரியை திட்டி வெளியேறுமாறு கூறினார்.

இதை அடுத்து ஒரு விதமான பதற்ற நிலை ஏற்பட்டதை தொடர்ந்து    காவல்துறையினா், இராணுவம் ஆகியோர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் சட்டவிரோத நிர்மாணத்தை உடைத்து அகற்றினர். #சட்டவிரோத #நிர்மாணிக்கப்பட்ட #அகற்றிய #வீதிஅபிவிருத்திஅதிகாரசபை #முறுகல் #பதற்றநிலை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More