Home இலங்கை காணாமல் போன மூவர் சடலங்களாக மீட்பு

காணாமல் போன மூவர் சடலங்களாக மீட்பு

by admin

முல்லைத்தீவு வவுனிக்குள குளக்கட்டில் கப் ரக வாகனம் ஒன்று தடம் புரண்டு   குளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

வானகத்தை செலுத்திய 37 வயதுடைய தந்தை, 3 வயதுடைய அவரது மகள் ஆகியோரின் சடலங்கள், இன்று (20) காலை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் சஞ்சீவன் என்ற 13 வயதுடைய மகன் நேற்று மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளாா் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

வாகன சாரதியான 37 வயதுடைய கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன்,அவரது மூன்று வயது மகளாக ரசீந்திரன் சார்ஜனா ஆகியோரை  நேற்று (19) இரவிரவாக தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று காலை இவ்வாறு கடற்படையினரின் உதவியுடன் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #காணாமல்போன #மீட்பு #முல்லைத்தீவு #வவுனிக்குள #விபத்து

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More