Home இலங்கை பிறந்த குழந்தையை புதைத்த பெண்

பிறந்த குழந்தையை புதைத்த பெண்

by admin

யாழ்.அரியாலை பகுதியில் இளம் பெண் குழந்தையை பிரசவித்து வீட்டு வளவினுள் புதைத்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 


அரியாலை பூங்கங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் வளவினுள் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.  குறித்த வீட்டில் வசித்து வந்த  24 வயதுடைய பெண் நேற்று வியாழக்கிழமை அதீத குருதிப்போக்கு காரணமாக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். 


மருத்துவ பரிசோதனையின் போது , குறித்த பெண் குழந்தையை பிரசவித்தமை கண்டறியப்பட்டு , சட்ட மருத்துவ அதிகாரி அப்பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்தார். 
அதன் போதே குழந்தை புதைக்கப்பட்ட விடயம் கண்டறியப்பட்டு , அது தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டு , குறித்த வீட்டிற்கு சட்ட வைத்திய அதிகாரி , திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மற்றும் காவல்துறையினர் சென்று புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை மீட்டனர்.


சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #யாழ்_அரியாலை  #குழந்தை #சடலம் 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More