Home இலங்கை யாழில் 3,736 பேர் தனிமைப்படுத்தலில்

யாழில் 3,736 பேர் தனிமைப்படுத்தலில்

by admin

யாழில் 1305 குடும்பங்களை சேர்ந்த 3,736 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளாா்.

யாழ் மாவட்டத்தில் இதுவரை 160 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்களுடன் நேரடித் தொடர்புகளை பேணிய 1,305 குடும்பங்களை சேர்ந்த 3,736 பரே இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவா் தொிவித்துள்ளாா்.

யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் தொிவிக்கும் போதே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா்.

மேலும் யாழில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 28 பேர் வீடு திரும்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கமைய செயற்படுவதன் மூலம் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை திறப்பது தொடர்பில் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள கொரோனா ஒழிப்பு தொடர்பில் ஆராயும் குழு கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா். #யாழ் #தனிமைப்படுத்தல் #கொரோனா #மகேசன் #சந்தைகளை

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More