Home இலங்கை அரசியல் கைதிகளென யாருமில்லை

அரசியல் கைதிகளென யாருமில்லை

by admin

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளென யாருமில்லை எனத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி, வழக்குகள் விசாரிக்கப்படாது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதனை தனிப்பட்ட வகையில் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் தொடர்பில், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனால் கேட்கப்பட்ட வாய்மூல கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தொிவித்துள்ளாா்.

இலங்கை தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ், அரசியல் குற்றங்களுக்காக எவரும் தடுத்து வைக்கப்படவும் இல்லை எனவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனையும் இருவருக்கு ஆயுள் தண்டனையும் மூவருக்கு சாதாரண தண்டனையும் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடா்பில் அவா்கள் மேன்முறையீடு செய்துள்ளனர் எனவும் அவா் தொிவித்துள்ளாா். .

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழோ அல்லது, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்கிற சந்தேகத்தின் பேரிலோ, தற்போது எவரும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் வழக்குகளை விசாரிக்காது நீண்டகாலமாக எவரும் தடுத்து வைக்கப்படுவதனை சட்டத்தரணி என்ற வகையில் தனிப்பட்ட ரீதியில் தன்னால் எப்போதுமே ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நீதியமைச்சர் அலி சப்ரி தொிவித்துள்ளாா். #அரசியல்_கைதிகள் #நீதிஅமைச்சர் #அலிசப்ரி #சுரேன்ராகன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More