Home இலங்கை யாழ் மாநகர சபை எல்லைக்குள், முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி புதிதாக அமைக்கப்படும்.

யாழ் மாநகர சபை எல்லைக்குள், முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி புதிதாக அமைக்கப்படும்.

by admin

யாழ் மாநகர சபை எல்லைக்குள், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி ஒன்றை புதிதாக அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் இன்றைய சபை அமர்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்று (13.01.21) மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கடந்த 8.01.21 அன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து மூன்று கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து சபை அமர்வு ஐந்து நிமிடங்கள் ஒத்திவைத்தல், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவம் மற்றும் காவற்துறையினர் உள்நுழைந்தமையை கண்டித்தல் மற்றும் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைத்தல் ஆகிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More