Home இலங்கை பாம்பு தீண்டி மரணம்

பாம்பு தீண்டி மரணம்

by admin

மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொண்டு சென்றவர் , பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.  மீசாலை தெற்கை சேர்ந்த யோ.குமார் (வயது 43) என்பவரே உயிரிழந்துள்ளார். 


குறித்த நபர் நேற்றைய தினம் சரசாலை பகுதியில் தமது மாட்டை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற வேளை புற்புதருக்குள் இருந்த பாம்பொன்று அவரை தீண்டியுள்ளது. 


அதனை அறியாத அவர் மாலை வீடு திரும்பிய நிலையில் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டமையை அடுத்து வீட்டில் இருந்தோர் அவரை சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். 
அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்க பட்ட போதிலும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். #பாம்பு #மரணம் #மீசாலை 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More