Home இலங்கை சசி வீரவன்ச CID யில் முறைப்பாடு

சசி வீரவன்ச CID யில் முறைப்பாடு

by admin

கடந்த சில நாட்களாக தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளார்.

அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சிக்கவும் கண்காணிக்கவும் மக்களுக்கு உரிமை உண்டு என்ற போதிலும் அது தொடர்பில் ஆராய்வதற்கு துணிச்சல் இல்லாதவர்கள் அரசியல்வாதிகளின் மனைவி, பிள்ளைகளை அவதூறு செய்வது கீழ்த்தரமானதும் வெட்கப்பட வேண்டியதுமான செயற்பாடு எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசியல் நடவடிக்கைகளில் தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் இத்தகைய செயற்பாடுகளால் தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் உள ரீதியான தாக்கம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #சசி_வீரவன்ச #முறைப்பாடு #விமல்_வீரவன்ச #குற்றப்புலனாய்வு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More