Home இந்தியா பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து – 19 போ் பலி – பலா் காயம்

பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து – 19 போ் பலி – பலா் காயம்

by admin

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அச்சன்குளம் கிராமத்தில் இய்ஙகி வரும் மாரியம்மாள் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 போ் பலியாகியுள்ளனா்.

இந்த தொழிற்சாலையில் பான்சி ரக வெடிகள் தயார் செய்யப்பட்டு வந்த நிலையில் அங்கு நேற்றையதினம் மதிய நேரம் 150க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்த பயங்கரவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது

இதன்போது தொழிற்சாலையில்உள்ள 60 அறைகளில் 15 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளதுடன் 13 அறைகள் பலத்த சேதம் அடைந்து தீப்பற்றி எரிந்துள்ளன.

அந்த அறைகளில் பணியாற்றிய பலர் றி தூக்கி வீசப்பட்டும், தீயில் எாிந்த நிலையிலும் உயிாிழந்துடள்ளதுடன் பலர் படுகாயங்களுக்குள்ளாகியிருந்தனா். காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தநிலையில் இந்த சம்பவத்தில் 19 பேர் பலியாகியுள்ளதுடன் . மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனா் எனவும் இது தொடா்பில் தொழிற்சாலை உரிமையாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. #பட்டாசு_தொழிற்சாலை #வெடிவிபத்து #சிவகாசி

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More