Home இலங்கை அமைச்சர்களின் குடும்பத்தினருக்கு திருட்டுத்தனமாக கொரோனா தடுப்பூசி

அமைச்சர்களின் குடும்பத்தினருக்கு திருட்டுத்தனமாக கொரோனா தடுப்பூசி

by admin

இலங்கையில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு திருட்டுத்தனமாக கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாக தொிவித்துக்கொண்டு இவ்வாறு குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்புசி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தொிவித்துள்ளாா்.

மேலும் நாட்டின் கடைசி குடிமகனுக்கு தடுப்பூசி ஏற்றப்படும் வரை தான் தடுப்பூசி செலுத்திக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #அமைச்சர்கள் #குடும்பத்தினருக்கு #திருட்டுத்தனமாக #கொரோனா #தடுப்பூசி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More