Home இலங்கை கடலுக்குள் வீழ்ந்த மோட்டார் சைக்கிள் – குடும்பஸ்தர் உயிரிழப்பு

கடலுக்குள் வீழ்ந்த மோட்டார் சைக்கிள் – குடும்பஸ்தர் உயிரிழப்பு

by admin

பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை காவல்துறையினா் தெரிவித்தனர்.

குறித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் வீழ்ந்தமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தில் கற்கோவலத்தைச் சேர்ந்த பவிதரன் (வயது-30) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.

விபத்து இடம்பெற்ற வீதியூடாக இன்று காலை பயணித்தவர்கள் பருத்தித்துறைகாவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் #பருத்தித்துறை #கடலுக்குள் #மோட்டார்சைக்கிள் #குடும்பஸ்தர் #உயிரிழப்பு

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More