Home உலகம் மியன்மாரில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலி – பலா் காயம்

மியன்மாரில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலி – பலா் காயம்

by admin

மியன்மாரில் ராணுவத்துக்கு எதிராக நடைபெறும் போரட்டத்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

மியன்மாரில் ராணுவத்துக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்குநாள் வலுப்பெற்று வருகின்ற நிலையில் மியன்மாரின் மாண்டலேவில் நடைபெற்ற போராட்டத்தில் ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய தாக்குதலிலேயே இவ்வாறு 2 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

மியன்மார் ராணுவத்தின் இத்தாக்குதலுக்கு ஐ. நா.,பிரான்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகள் கடுமையாக கண்டனம் வெளியிட்டுள்ளன.

மியன்மாரில் கடந்த வாரம் தலைநகர் நேபிடாவில் இடம்பெற்ற ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் ராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்ட தாக்குதலில் 20 வயதான பெண் ஒருவா் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்திருந்தாா். இந்த நிலையில் தற்போது மேலும் 2 பேர் பலியாகியுள்ளனா். #மியன்மார் #ராணுவத்தினர் #தாக்குதல் #பலி #போராட்டம்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More