Home இலங்கை பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை பிரதமர் வரவேற்றார்

பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை பிரதமர் வரவேற்றார்

by admin

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினரை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் வைத்து இன்று (2021.02.23) வரவேற்றார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு சென்றுள்ளனா்.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த இம்ரான் கான் பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராவார். பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இம்ரான் கான் பயணம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன், 2021ஆம் ஆண்டிற்கான அவரது முதலாவது வெளிநாட்டு பயணமாகவும் இது அமைந்துள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பாகிஸ்தான பிரதமரை வரவேற்கும் பொருட்டு 19 துப்பாக்கி வேட்டுகள் முழங்கப்பட்டு, இராணுவ மரியாதை அணிவகுப்பொன்றும் இடம்பெற்றது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் அதில் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் விமான நிலையத்தில் சிறப்பு விருந்தினர்களுக்கான நினைவு குறிப்பில் (கோல்டன்   புக்) கையெழுத்திட்டார்.


இலங்கைக்கு சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமருக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையிலான நேரடி இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று மாலை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர் பிரதமர்கள் இருவரின் பங்கேற்புடன் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.


அதேவேளை பாகிஸ்தான் பிரதமர் நாளைய தினம் (24) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவைச் சந்திக்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து கொழும்பில் இடம்பெறும் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்து கொள்ளும் இம்ரான் கான் மீண்டும் தனது நாட்டிற்கு திரும்புவதற்கு முன்னதாக இலங்கை வீரர்களையும் சந்திக்கவுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஸ ஷ மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். #பாகிஸ்தான்_பிரதமர் #கட்டுநாயக்க #மகிந்தராஜபக்ஸ #இம்ரான்கான்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More