Home உலகம் மியன்மாரில் போராட்டக்காரா் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு – 18பேர் பலி

மியன்மாரில் போராட்டக்காரா் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு – 18பேர் பலி

by admin

மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில் 18 பேர் பலியாகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளதுடன் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் எனக் கோரி கடந்த சில வாரங்களாக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று   ஞாயிற்றுக்கிழமை யங்கூன், தாவெய், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில்   காவல்துறையினா் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 18 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் ஐநா மனித உரிமை பேரவை தெரிவித்துள்ளது.

மியன்மாாில் மக்களுக்கான சர்வதேச நாடுகளின் ஆதரவும் தொடர்ந்து பெருகி வருவதனையடுத்து ராணுவத்தினர் கடுமையாக போராட்டத்தை ஒடுக்க தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #மியன்மார் #போராட்டக்காரா் #ராணுவம் #துப்பாக்கிச்_சூடு #ஆங்சான்சூகி

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More