Home இலங்கை உடல்களை புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணை தீவில் போராட்டங்கள்

உடல்களை புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணை தீவில் போராட்டங்கள்

by admin



கொரோனாதொற்றினால் உயிாிழந்தவர்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று புதன்கிழமை இரணை மாதா நகர் பகுதி மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும் தொடர்ச்சியாக அங்கு உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (4) இரண்டு இடங்களில் அப்பகுதி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இரணை தீவு பிரதான இறங்குதுறை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள்  தோண்டப்பட்ட இடம் ஆகியவற்றில் மக்கள் இவ்வாறு இன்று போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.


நேற்றைய தினம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல தரப்பட்ட தரப்பினாிடம் இரணை தீவு மக்கள் நேரடியாக சென்று எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்ட போதிலும் இதுவரை சடலங்களை அடக்கம் செய்வதற்கான மாற்று இடம் தெரிவு செய்யப்படவோ அல்லது இரணை தீவுப் பகுதியிலே மேற்கொள்ளப்பட்டு வரும் சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளோ நிறுத்தப்படாத நிலையில் மக்கள் இவ்வாறு இன்று இவ்வாறு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.


அதேவேளை இரணைதீவுப் பகுதிக்கு செல்லும் மக்களிடம் கடற்படையினர் அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாகவும் தீவுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தீவுக்கு செல்வதற்கு முன் அடையாள அட்டையை கடற்படையினரிடம் ஒப்படைத்து செல்ல வேண்டும் என பணிக்கப்படுவதாகவும் பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனா். #இரணைதீவு #போராட்டம் #கடற்படையினர் #கொரோனா

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More