Home இலங்கை ஒரு மாதகாலத்துக்கு வீதி மூடப்பட்டுள்ளது

ஒரு மாதகாலத்துக்கு வீதி மூடப்பட்டுள்ளது

by admin

யாழ்ப்பாணம் கோயில் வீதியில் நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி போக்குவரத்து இன்று முதல் ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

நல்லூரான் வளைவு கட்டுமானப் பணிக்கு வசதியாக இன்றையதினம் முதல் ஒரு மாத காலத்துக்கு இந்தப் போக்குவரத்துத் தற்காலிக தடை நடைமுறையில் இருக்கும்.

இதற்கு மாற்றுப் பாதையாக நல்லூர் ஆலயத்திலிருந்து கோவில் வீதியுடாகச் செல்லும் சிறிய வாகனங்கள் செட்டித்தெரு வீதி செட்டித்தெரு ஒழுங்கை ( சின்னமயா மிஷன் வீதி) ஊடாகவும் நாவலர் வீதியிலிருந்து நல்லூர் ஆலயத்துக்கு கோயில் வீதியில் 
பயணிக்கும் வாகனங்கள் செட்டித்தெரு ஒழுங்கை செட்டித்தெரு ஊடாகவும் பயணிக்க முடியும்.

கனரக வாகனங்கள் இந்தப் பாதையை பயன்படுத்தத் தடை என  யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் என குறிப்பிட்டுள்ளார் #யாழ்ப்பாணம் #கோயில்வீதி #நாவலர்வீதி #நல்லூர்_ஆலயம் #மணிவண்ணன் #நல்லூரான்_வளைவு

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More