Home இலங்கை பருத்தித்துறை பகுதியில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது – களவு கொடுத்தோரை காவல் நிலையத்திற்கு அழைப்பு

பருத்தித்துறை பகுதியில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது – களவு கொடுத்தோரை காவல் நிலையத்திற்கு அழைப்பு

by admin

பருத்தித்துறை பகுதிகளில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை சிவன் கோவிலுக்கு அண்மையில் நேற்றுமுன்தினம்  சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இளைஞனை கைது  விசாரணைக்குட்படுத்திய போதே துவிச்சக்கர வண்டிகளைத் திருடியமை தெரியவந்தது என்று காவல்துறையினா் கூறினர்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபரால் திருடப்பட்ட 21 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சில துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்படவுள்ளன. திருடப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை சந்தேக நபர் விற்பனை செய்து பணத்தை எடுத்துள்ளார்.

மீட்க்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் பருத்தித்துறை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

துவிச்சக்கர வண்டி திருடப்பட்டிருந்தால் உரியவர்கள் அதனை அடையாளம் காட்டமுடியும் என்று பருத்தித்துறை காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். #பருத்தித்துறை #துவிச்சக்கரவண்டி #திருட்டு #இளைஞன் #கைது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More