Home இலங்கை ஊடகங்கள் தொடர்பான ஜனாதிபதியின் கூற்று ஊடக சுதந்திரம் மீதான கடும் எச்சரிக்கை – ஊடக இயக்கங்களின் கூட்டமைப்பு

ஊடகங்கள் தொடர்பான ஜனாதிபதியின் கூற்று ஊடக சுதந்திரம் மீதான கடும் எச்சரிக்கை – ஊடக இயக்கங்களின் கூட்டமைப்பு

by admin

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ கடந்த மார்ச் 20 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை பிரதேச செயலகத்தின் யோம்புவெல்தென்ன கிராமத்தில் நடைபெற்ற “கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்வில் பங்கேற்று பொது ஊடகம் தொடர்பில் வெளியிட்ட கருத்தானது ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமைக்கும் பாரிய அச்சுறுத்தல் விடுக்கும் சமிஞ்சையாக ஊடக இயக்கங்களின் கூட்டமைப்பு கருதுவதுடன் அது தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையை தெரிவித்துகொள்கின்றது.


சில ஊடகங்கள் உண்மை கருத்துக்களை திருபுபடுத்தி வேறுவிதத்தில் வெளியிடுவதாகவும் , ஊடக சுதந்திரம் எனப்படுவது ஊடக உரிமையாளர்களின் சுதந்திரம் அல்ல என்பதையும் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

“இது ஒரு மாஃபியா,எங்கள் நாட்டில் மன்னர்கள் இல்லை,மகாராஜாக்கள் இல்லை,இந்தியாவில் மாகாராஜாக்கள் இருந்தனர். உரிமையாளர் விரும்பிய படி நாட்டை இயக்க முடியாது. ஆட்சியாளர்களை ஆட்சி செய்ய முயற்சிக்கின்றனர். அந்த விடயம் என்னிடம் நடக்காது. எனக்கு தெரியும் பாடம் பயில வேண்டுமாயின் பாடம் புகட்ட.நான் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளேன்.

எந்தவொரு ஊடக நிறுவனத்தையும் அச்சுறுத்தியதில்லை.(ஊடக சுதந்திரத்தை)தவறாகப் பயன்படுத்த முற்பட்டால் அதற்கு எதிராக சட்ட ஏற்பாடுகள் உள்ளன.குறித்த ஊடகம் மட்டுமல்ல, சில தேசிய சிந்தனை கொண்ட ஊடகங்களும் போலி செய்திகளை ஒளிபரப்பியுள்ளது. போர் காலங்களில் எமக்கு எதிராக பணியாற்றியவர்களும் இதில் உள்ளதுடன் அவர்கள் மீள எழுந்துள்ளனர்” என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


ஊடக சுதந்திரம் என்பது ஊடக உரிமையாளர்களின் சுதந்திரம் அல்ல மற்றும் கருத்துக்களை திரிபுபடுத்தி அறிக்கையிடுதல் தவறான செயற்பாடு என்ற ஜனாதிபதியின் கூற்றுடன் எமக்கு எந்தவித மாற்று கருத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், ஜனாதிபதி குறிப்பிட்ட கூற்றின் படி ஏதொ சில ஊடக நிறுவனங்களை குறிவைத்து குறிப்பிடப்பட்டுள்ளதுடன், குறிப்பாக அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனக் கருத்துக்களை தெரிவிக்கும் ஊடகங்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகவே ஊடக இயக்கங்களின் கூட்டமைப்பு இச்செயலை காண்கின்றது.


குறிப்பாக “அந்த விடயம் என்னிடம் நடக்காது. பாடம் பயில வேண்டுமாயின் பாடம் புகட்ட எனக்கு தெரியும். போர் காலங்களில் எமக்கு எதிராக பணியாற்றியவர்களும் இதில் உள்ளதுடன் அவர்கள் மீள எழுந்துள்ளனர்” போன்ற சொல் பிரயோகங்கள் கடந்த காலங்களில் பொது ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ள நேரிட்ட இன்னும் தீர்க்கபாடாத குற்றங்களின் நினைவூட்டலாகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நிலைமை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக உரிமையாளர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரையும் அச்சுறுத்துவதாகவும், இதன் மூலம் ஊடக சுதந்திரம் மற்றும் தகவல் தெரிவிக்கும் உரிமை மீறப்படுவதாகவும் ஊடக கூட்டணி நம்புகின்றது.எனவே, ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை தொடர்பான பிரச்சினைகளை உண்டாக்கும் இத்தகைய அணுகுமுறைகளிலிருந்து விலகி, அதற்கான சுயாதீனமான, சுதந்திரமான சூழலை உருவாக்குமாறு ஜனாதிபதி, அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம்,சுதந்திர ஊடக இயக்கம் , இளம் பத்திரிகையாளர்கள் சங்கம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் , ஊடக தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் போன்ற இயக்கங்களின் ஒன்றிணைப்பான ஊடக இயக்கங்களின் கூட்டமைப்பு கேட்டுகொள்கின்றது. #ஊடகங்கள் #ஜனாதிபதியின் #ஊடக_சுதந்திரம் #ஊடகஇயக்கங்களின்_கூட்டமைப்பு


தர்மசிறி லங்காபேலி,
செயலாளர்,
ஊடக தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனம்

சீதா ரஞ்சனி,
அழைப்பாளர் ,
சுதந்திர ஊடக இயக்கம்

துமிந்த சம்பத்,
தலைவர்,
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம்

என்.எம் அமீன்,
தலைவர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்

கணபதிப்பிள்ளை சர்வானந்த,
செயலாளர்,
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்

ஹர்ஷன துஷார சில்வா,
செயலாளர்,
இளம் பத்திரிகையாளர்கள் சங்கம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More