Home இலங்கை மாதகல்லில் 110 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

மாதகல்லில் 110 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

by admin

யாழ்ப்பாணம் மாதகல் கடல் கரை பகுதியில் 110 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர்   கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  மாதகல் கடல் வழியூடாக படகில் ஒருவர் கஞ்சா போதை பொருளை கடத்தி வருவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் கரையில் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் படகில் கஞ்சாவை கடத்தி வந்து கரையில் இறக்க முற்பட்ட வேளை கடற்படையினர் அவரை முற்றுகையிட்டு கைது செய்தனர்.  அதன் போது அவர் படகில் கடத்தி வந்திருந்த 110 கிலோ கஞ்சாவையும் கடற்படையினர் மீட்டனர்.
சம்பவம் தொடர்பில் இளவாலை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கபப்ட்டதை அடுத்து    சம்பவ இடத்திற்கு  சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , கடற்படையினரால் கைது  நபரையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் பொறுப்பெடுத்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்,.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More