Home இலங்கை நிமலின் தாயாருக்கு யாழ்.ஊடக அமையம் அஞ்சலி

நிமலின் தாயாருக்கு யாழ்.ஊடக அமையம் அஞ்சலி

by admin

யாழில்.படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் தாயாரின் பூதவுடல் இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.  நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட பின்னர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அவரது குடும்பத்தினர் கனடா நாட்டில் தஞ்சம் புகுந்திருந்தனர்.  இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிமலராஜனின் தயாரான லில்லி திரேஸ் மயில்வாகனம் காலமானார். 


சென்.அன்ட்ரூ தேவாலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு , பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் . யாழ்.ஊடக அமையத்தின்  கனடா கிளை உறுப்பினர்கள் தாயாரின் பூதவுடலுக்கு மலரஞ்சலி செலுத்தி ,அஞ்சலி செலுத்தினர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More