Home இலங்கை வீடொன்றிலிருந்து துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பொதி மீட்பு

வீடொன்றிலிருந்து துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பொதி மீட்பு

by admin

வீடொன்றில் இருந்து 15 துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பொதி ஒன்றினை கல்முனை காவல்துறையினா் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 5 ஆம் கிராமசேவகர் பிரிவு அல்-ஹம்றா வீதியில்  உள்ள வீடொன்றின் கூரையில் இருந்து எம்-16 துப்பாக்கிக்கு பயன்படுத்தும் தோட்டாக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்ட வீட்டு உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இன்று(7) மதியம் கல்முனை காவல்துறை விசேட பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றதுடன் அவ்வீட்டில் இருந்து 54 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் கைதாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More