Home இலங்கை சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மறை சாட்சிகள் நினைவு விழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மறை சாட்சிகள் நினைவு விழா

by admin


மன்னார் மறை மாவட்டத்தின்  மறைசாட்சிகள் நினைவு விழாவானது கொரோனா சூழ்நிலை காரணமாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அமைதியான  முறையில் நேற்று  சனிக்கிழமை (17) நடைபெற்றது.


 கடந்த வெள்ளிக்கிழமை (16)   அருட்தந்தை லுமன் லோகு அவர்களினால் கொடியேற்றத்துடன் திருப்பலியும் இடம் பெற்றதுடன் நேற்று   சனிக்கிழமை (17)   காலை 7.15 மணிக்கு அருட்பணி சூ.அன்ரனி பொன்சியன்   அவர்களின் தலைமையில்  நினைவு விழா  திருப்பலி கூட்டுத்திருப்பலியாக  தோட்டவெளிப்பங்குத்தந்தை அருட்பணி டே.அலெக்சாண்டர் சில்வா (பெனோ) , செட்டிகுளம் பங்குத்தந்தை அருட்பணி இம்மானுவேல் செபமாலை ஆகியோர்  இணைந்து திருப்பலியை   ஒப்புக்கொடுத்தனர்.


திருவிழாவின் நிறைவில் மன்னார் மறைசாட்சிகளின் புனித நிலைக்கு உயர்த்துவதற்கான உருக்கமான செபவேண்டுதலும் வழமைபோல் இல்லாமல் குறைவான பக்தர்கள் கலந்துகொண்டு இறையாசி பெற்றுச்சென்றனர்.
கொரோனா சூழலை கருத்தில் கொண்டு நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற சுகாதார விதி முறைகளுக்கு உட்பட்டு விழாவானது மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More