Home இந்தியா தமிழ் எழுத்துகளால் வரையப்பட்ட திருவள்ளுவா் ஓவியம்

தமிழ் எழுத்துகளால் வரையப்பட்ட திருவள்ளுவா் ஓவியம்

by admin

தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவரின் ஓவியத்தை ஓவியரான கணேஷ் என்பவா் வரைந்துள்ளாா். எந்த மதத்தையும் சாராமல் அனைவருக்கும் பொதுவான ஒரு நூல் என்றால், அது உலக பொதுமறையான திருக்குறள்தான். அந்த நூலை உலகுக்குத் தந்தவர் திருவள்ளுவர்.

இந்த நிலையில், ஓவியர் கணேஷ் தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து என கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துகள் வரையுள்ள 741 எழுத்துகள் மூலம் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்து ருவிட்டரில் வெளியிட்டுள்ளாா். அத்துடன் அதனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரையும் ரக் செய்திருந்தார்.

இந்த ஓவியத்தை பார்த்து ஆச்சரியமடைந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது ருவிட்டரில், “‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ்மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்” என்று பாராட்டியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More