Home இந்தியா விஜய் மல்லையாவை திவாலானவர் என லண்டன் உயர் நீதிமன்றம் அறிவிப்பு

விஜய் மல்லையாவை திவாலானவர் என லண்டன் உயர் நீதிமன்றம் அறிவிப்பு

by admin

இந்தியாவில் வங்கிக் கடன் மோசடி செய்த வழக்குகளில் தேடப்பட்டு வருபவரும் லண்டனில் வாழ்ந்து வருபவருமான விஜய் மல்லையாவை திவாலானவர் என லண்டன் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது

அவர் கடன் பெற்றிருந்த வங்கிகள் குழுவுக்கு தலைமை தாங்கும் இந்திய ஸ்டேட் வங்கி 2018இல் தொடர்ந்த வழக்கு தொடா்பில் நேற்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், விஜய் மல்லையா திவாலனவர். எனவும் அவரது சொத்துகளை ஜப்தி செய்யலாம் எனவும் தொிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு இந்திய வங்கிகள் குழுவுக்கு வெற்றியாக கருதப்பட்டாலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான உரிமை விஜய் மல்லையாவுக்கு உள்ளது.

முன்னதாக, விஜய் மல்லையாவுக்கு எதிராக 13 நிதி நிறுவனங்கள் சோ்ந்து ஒரு குழுவாக எஸ்பிஐ தலைமையில் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி முதல் கணக்கிட்டு, ஆண்டுக்கு 11.5 சதவீத வட்டியுடன் கூடிய கடன் தொகையை விஜய் மல்லையா செலுத்த வேண்டும் என கோரியிருந்தன.

ஆனால், இந்தியாவில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த விஜய் மல்லையா, வட்டித் தொகையுடன் கூட்டு வட்டி விதிக்கப்படுவதை எதிர்த்தார். இந்த வகையில், விஜய் மல்லையா பிரித்தானிய பண மதிப்பில் 1 பில்லியன் பவுண்டுகள் வரை வங்கிகளுக்கு செலுத்த வேண்டும்.

இந்த நிலையிலேயே விஜய் மல்லையாவை திவாலானவர் என்று லண்டன் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் அந்த பணத்தை விஜய் மல்லையாவின் சொத்துகளை ஜப்தி செய்து ஈடு செய்ய இதுவரை நிலவி வந்த சட்ட தடங்கல்கள் நீங்கியுள்ளன.

இருப்பினும், மேல்முறையீட்டிலும் இந்த வங்கிகள் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய வங்கிகளால் விஜய் மல்லையாவின் சொத்துகளை ஜப்தி செய்து விற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More