Home இலங்கை பாரிஸ் புறநகர் வீட்டில் இருந்து, தமிழ் தாயும் மகளும், சடலங்களாக மீட்பு!

பாரிஸ் புறநகர் வீட்டில் இருந்து, தமிழ் தாயும் மகளும், சடலங்களாக மீட்பு!

by admin


பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 52 வயதான தாய் , 21 வயதான மகள்என இருவரது சடலங்கள், இன்று காலை காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.


சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டில் மிகவும் அதிர்ச்சியுற்ற நிலையில் காணப்பட்ட தந்தையும் இரண்டு ஆண் பிள்ளைகளும் காவற்துறையினரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று முதலில் வெளியாகிய தகவல்கள் தெரிவித்தன.


புலம்பெயர்ந்து வசிக்கின்ற தமிழ் குடும்பத்தினரது வீட்டிலேயே இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. கொலையுண்டவர் களது பெயர் மற்றும் மேலதிக விவரங் கள் உடனடியாகத் தெரியவரவில்லை.


வேலை முடிந்து இன்று காலை வீடு திரும்பிய தந்தையார் மனைவியும் மகளும் வீட்டு அறையில் கூரிய ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்களுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டார் என்று கூறப்படுகிறது.

அயலவர்களால் அவசர மீட்புப் பிரிவிவினரும் காவற்துறையினரும் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்த சமயம் தந்தையாரும் அவரது இரண்டு புதல்வர் களும் மிகவும் அதிர்ச்சியுற்றவர்களாகக் காணப்பட்டனர் என்றும் பின்னர் அவசர முதலுதவிப் பிரிவினரால் மூவரும் பொலீஸ் பாதுகாப்புடன் பொந்துவாஸ் மருத்துவமனைக்குக் (centre hospitalier
René-Dubos de Pontoise) கொண்டு செல்லப்பட்டனர் என்றும் உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


மூவரும் அதிர்ச்சியுற்ற காரணத்தால் வீட்டில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை விசாரணை மூலம் உடனடியாக அறிந்து கொள்ள முடிய வில்லை என்று ஊடகங்களில் வெளி யாகிய தகவல்கள் கூறுகின்றன.


இக் கொலைகள் தொடர்பான விசாரணைகளைப் பொந்துவாஸ் அரச சட்ட வாளர் அலுவலகம், Versailles நீதிமன்றப் காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளது என்று’பரிஷியன்’ ஊடகம் தெரிவித்துள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.
10-08-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More