Home இலங்கை வடமராட்சியில் கொரோனோவால் இருவர் மரணம்

வடமராட்சியில் கொரோனோவால் இருவர் மரணம்

by admin

வடமராட்சியில் இன்று முதியவர்கள் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.

மருதங்கேணி பிரதேச மருத்துவமனையில் அமைந்துள்ள கொவிட்-19 சிகிச்சை பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த செம்பியன்பற்று மாமுனையைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 241ஆக உயர்வடைந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More