Home இலங்கை அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் இன்று நள்ளிரவு முதல் பிரகடனம்…

அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் இன்று நள்ளிரவு முதல் பிரகடனம்…

by admin


பொதுமக்கள்பாதுகாப்புக்கட்டளைச்சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அக்கட்டளைச் சட்டத்தின் ii ஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுவிநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகாலவிதிமுறைகள், இன்று நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


நெல், அரிசி, சீனிஉள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிகவிலை அறவிடுவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தின் உத்தரவாதவிலைக்கு அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலைக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், அரசவங்கிகளின் மூலம் மொத்தமாகக் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கடன், கடன் பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அறவிடப்படக்கூடியவகையில் இது நடைமுறைப்படுத்தப்படும்.


சாதாரணபொதுமக்களின்வாழ்க்கைநிலையைஇயல்புநிலையில்பேணுவதற்குத்தேவையானநெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப்பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசியச்சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More