Home இலங்கை 99வயது வல்வை மூதாட்டி கொரோனோவால் உயிரிழப்பு – 42 கொள்ளுபிள்ளைகளை கண்டவர்

99வயது வல்வை மூதாட்டி கொரோனோவால் உயிரிழப்பு – 42 கொள்ளுபிள்ளைகளை கண்டவர்

by admin

வல்வெட்டித்துறையில் 99 வயது மூதாட்டியொருவர் கொரோனோ தொற்றுக்கு உள்ளன நிலையில் உயிரிழந்துள்ளார்.  வல்வெட்டித்துறை சிவகுரு வீதி , மாதவடியை சேர்ந்த தேசோமயானந்தம் புஸ்பகாந்தியம்மா (வயது 99) என்பவரே உயிரிழந்துள்ளார்.   1922ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி பிறந்த புஸ்பகாந்தியம்மாவிற்கு 12 பிள்ளைகளும் , 64 பேரப்பிள்ளைகளும் , 133 பூட்டப்பிள்ளைகளும் , 42 கொள்ளுபேரப்பிள்ளைகளும் உள்ளனர்   

அவர் தனது வீட்டில் நேற்று திடீரென நோய் வாய்வாய்ப்பட்ட நிலையில் மந்திகை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். அதனை அடுத்து அவரது சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More