Home இலங்கை போதையில் தாக்கியதால் திருப்பி தாக்கினேன் – திருகுவளையால் கணவனை தாக்கிக்கொன்ற மனைவி வாக்குமூலம்

போதையில் தாக்கியதால் திருப்பி தாக்கினேன் – திருகுவளையால் கணவனை தாக்கிக்கொன்ற மனைவி வாக்குமூலம்

by admin

அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற படுகொலைதொடர்பாக இன்று காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல் நேரடியாக சென்று விசாரணைகளை   மேற்கொண்டார்.


மனைவியால் திருவலகை மூலம் அடித்துகொலை செய்யப்பட்டவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு, விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தை பிரேத ப‌ரிசோதனை‌க்காகயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க நீதவான் அறிவுறுத்தினார். குறித்த சம்பவத்தில் துரைராசா செல்வக்குமார் (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.


அதேவேளை, கணவன் தினமும் போதையில் வந்து தன்னுடன் தர்க்கப்பட்டு, தன்னை தாக்குவதாகவும் நேற்றைய தினமும் வழமை போன்று இரவு போதையில் வந்து தர்க்கப்பட்டு தாக்கிய போது, தான் ஆத்திரத்தில கையில் அகப்பட்ட திருகுவளையால் திருப்பி தாக்கிய போது , அவர் உயிரிழந்துவிட்டார் என விசாரணையில் தெரிவித்ததாக காவல்துறையினா் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More