Home இலங்கை இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் யாழ் – திருமலை – கண்டிக்கும் செல்கிறார்!

இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் யாழ் – திருமலை – கண்டிக்கும் செல்கிறார்!

by admin

இலங்கை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேயின் அழைப்பின் பேரில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா 2021 அக்டோபர் 2 – 5 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார்.

இந்தப் பயணம் நீண்டகால பலதரப்பட்ட உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்புக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஷ்ரிங்லா, இலங்கை வெளியுறவுச் செயலாளருடன் இருதரப்புக் கலந்துரையாடலை மேற்கொள்ள உள்ள அதேவேளை, மேலதிகமாக, ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

அத்துடன், இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கையில் தங்கியிருக்கும் போது கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கான பயணங்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றதன் பின்னர், அவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்பபம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More