Home இலங்கை கொத்மலை ஓயாவில் காணாமல் போன இளைஞன் -3வது நாளாகவும் தேடும் பணி

கொத்மலை ஓயாவில் காணாமல் போன இளைஞன் -3வது நாளாகவும் தேடும் பணி

by admin

(க.கிஷாந்தன்)

பூண்டுலோயா காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பூண்டுலோயா வெவஹேன பிரதேசத்தில் கொத்மலை ஓயாவில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் 02.09.2021 மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனர்.

5 பேர் கொண்ட தனது நண்பர்களுடன்  வெவஹேன பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே இவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார். இதன் போது கால் தவறி குறித்த இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனவர் பூண்டுலோயா கும்பாலொலுவ பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான 34 வயதுடைய இலங்க சஞ்சீவ என தெரியவந்துள்ளது.

நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனை தேடி பூண்டுலோயா காவல்துறை பாதுகாப்பு பிரிவினரும், நுவரெலியா இராணுவத்தினரும், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மூன்றாவது நாளாக இன்றும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More