Home இலங்கை குருநகர் மீனவர்களின் படகை சேதப்படுத்திய இந்திய ரோலர் படகு – மீனவர்களை கடலில் வீசவும் முயற்சி

குருநகர் மீனவர்களின் படகை சேதப்படுத்திய இந்திய ரோலர் படகு – மீனவர்களை கடலில் வீசவும் முயற்சி

by admin

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை படகு,  குருநகர் பகுதி மீனவர்களின் படகினை நேராக மோதி  சேதப்படுத்தியதோடு படகில் இருந்த  குருநகர் மீனவர்களை தாக்கி  கடலில் தூக்கிப் போடவும் இந்திய மீனவர்கள் முயன்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. 


குருநகர் பகுதியில் இருந்து நேற்று  மீன்பிடி தொழிலுக்காக ஒரு படகில் மூவர் சென்ற நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இலங்கை கடற்பரப்பில் அமைந்துள்ள  கக்கடதீவு பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய  ரோலர்,   இலங்கை மீன்பிடி  படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்தியது. 
அத்தோடு இந்திய மீனவர்கள் படகில் இருந்த குருநகர் மீனவர்களை  தாக்கி படகில் இருந்த மூவரையும் கடலில் தூக்கிப் போடவும் முயன்றுள்ளனர். 


இந்திய ரோலர் படகு மோதியதில் குருநகர் மீனவர்களின் படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை சேர்ந்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More