Home இலங்கை சங்கானையில் வெள்ள வாய்க்காலில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

சங்கானையில் வெள்ள வாய்க்காலில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

by admin

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் காணாமல் போன சிறுவன் வெள்ள வாய்க்காலில், வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். சங்கானை ஸ்தான அ.மி.த. க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் நிரோஜன் ஸ்டீபன் (வயது 6) எனும் சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். 


குறித்த சிறுவன் நேற்றைய தினம் சனிக்கிழமை மதியம் முதல் காணாமல் போயுள்ளதனை அடுத்து குடும்பத்தினர் , அயலவர்கள் பல மணி நேரமாக சிறுவனை அப்பகுதிகளில் தேடியுள்ளனர். 
அந்நிலையில் இரவு 9.30 மணியளவில் , அப்பகுதியில் உள்ள வெள்ள வாய்க்காலில், வெள்ளம் தேங்கியுள்ள நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். 
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More