Home இலங்கை ஏறாவூர் பகுதியில் பொது மகனை கொடூரமாக தாக்கிய காவல்துறையினர் – வெளியான காணொளி

ஏறாவூர் பகுதியில் பொது மகனை கொடூரமாக தாக்கிய காவல்துறையினர் – வெளியான காணொளி

by admin


மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் பொதுமகன்  இருவரை  தாக்கும் வகையிலான காணொளி வெளியாகியுள்ளது.

  
குறித்த சம்பவம் இன்று (22) மாலை பதிவாகியுள்ளதாக  தெரிய வருகின்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை போக்குவரத்து காவல்துறையினா் நிறுத்தியதாகவும், அதனை அவதானிக்காது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த நபரை பின் தொடர்ந்து வந்த காவல்துறை அதிகாரி இடையில் மறித்து இரண்டு நபர்களில் ஒருவர் மீது   கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More