Home இலங்கை இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, வியாபார நிலையங்கள், சந்தைகளில் கடமையாற்ற முடியும்

இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, வியாபார நிலையங்கள், சந்தைகளில் கடமையாற்ற முடியும்

by admin

மன்னார் மாவட்டத்தில் இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை திங்கட்கிழமை (15) முதல் வியாபார நிலையங்கள், சந்தைகள் ,பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். -இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,


தற்பொழுது மன்னாரில் உள்ள காலநிலையினால் வைரஸ் பரவுவதற்கு ஏற்ற சூழ் நிலையாக காணப்படுகின்றது. மக்கள் கட்டாயம் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா தொற்று அதிகரிப்புக்கு பிரதான காரணமாக மக்கள் அதிகமாக வெளியில் நடமாடுவது. சுகாதார நடை முறைகளை கடை பிடிக்காது செயல்படுவது மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பங்கு கொள்வதும் ஒரு காரணமாக இருக்கிறது. 


மன்னார் மாவட்டத்தில் இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை திங்கட்கிழமை (15) முதல் வியாபார நிலையங்கள், சந்தைகள் ,பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்.


-மாவட்டத்தில் கடந்த 13 நாட்களில் 292 தொற்றாளர்களும் இது வரை மன்னார் மாவட்டத்தில் 2685 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More