Home உலகம் ஈகுவடாா் சிறையில் மோதல் – குறைந்தது 68 கைதிகள் பலி

ஈகுவடாா் சிறையில் மோதல் – குறைந்தது 68 கைதிகள் பலி

by admin

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரின் குயாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் உள்ள சிறையில் நேற்று முன்தினம் இருதரப்பு கைதிகள் இடையே இடம்பெற்ற மோதல் பெரும் கலவரமாக வெடித்ததில் குறைந்தது 68 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈகுவடாரில் நீண்ட காலமாகவே சிறைச்சாலைகளின் நிலைமை மோசமான சூழலில் உள்ளது . அங்கு மொத்தமுள்ள 60 சிறைகளில் 29 ஆயிரம் கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும் என்ற போதிலும் அதைவிட அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதனால் சிறைகளில் பல்வேறு பிரச்சினைக்கு வித்திடுகிறது.


குற்ற வழக்குகளில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கொலையாளிகள், கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் தனிதனி குழுக்களாக பிரிந்து அடிக்கடி கோஷ்டி மோதல்களில் ஈடுபடுகின்றனர்.‌ ஆயிரக்கணக்கான சிறை கைதிகளை கண்காணிக்க குறைவான காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளதனால் அங்குள்ள பல சிறைகளில் சிறை அதிகாரிகளை விட கைதிகளின் கையே ஓங்கியுள்ளது.

எனவே, ஈகுவடார் சிறைகளில் அடிக்கடி கலவரம், வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து ஏராளமான உயிர் பலிகள் ஏற்படுகின்றன. இதனால் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் அவசர நிலையை ஜனாதிபதி அந்நாட்டு பிரகடனப்படுத்தியுள்ளாா். ர். ஆனாலும் சிறைகளில் வன்முறையை கட்டுப்படுத்த முடியாததால் உயிர் பலிகள் தொடர்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் ஈகுவடாரில் ஒரே நாளில் 3 சிறைகளில் நடந்த மிகப்பெரிய கலவரத்தில் 79 கைதிகள் கொல்லப்பட்டிருந்தமை நினைவுகூரத்தக்கது.


Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More