Home இலங்கை காணிகளை அளவீடு எதிா்ப்புகளால் நிறுத்தம்

காணிகளை அளவீடு எதிா்ப்புகளால் நிறுத்தம்

by admin

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கே. என் 23 கிராம அலுவலர் பிரிவில் உள்ள  தனியார் காணிகளை அளவீடு செய்யும் முயற்சி  மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள்  பிரதிநிதிகளின் எதிர்ப்பை அடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

  காவல்துறையினாின் கட்டுப்பாட்டில்  உள்ள குறித்த காணிகளை சுவீகரிக்கும் நோக்கில், அளவீடு செய்வதற்காக  நில அளவையாளர்கள், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் குறித்த இடத்துக்கு, இன்று சென்றிருந்ஹத நிலையில் , சம்பவ இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், காணி உரிமையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், தவிசாளர்கள் என பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் .

மேலும் குறித்த காணி தொடர்பில், கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதும் காணி உரிமையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து காணி அளவீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More