Home இலங்கை சுமந்திரன் – சாணக்கியன் கலந்து கொண்ட கனடா கூட்டத்தை ஒருசாரார் குழப்பினர்!

சுமந்திரன் – சாணக்கியன் கலந்து கொண்ட கனடா கூட்டத்தை ஒருசாரார் குழப்பினர்!

by admin


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோர் கனடாவில் கலந்து கொண்ட கூட்டத்தில், ஒருசாரார் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.


இதனால், கூட்டம் இடைநடுவிலேயே நிறுத்தப்பட்டது. மண்டபத்துக்குள் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, அம்மண்டபத்துக்கு வெளியே ஒரு குழுவினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.


ஒரு தரப்பினர் எழுந்து எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டது. இறுதியில் கனடிய காவற்துறையினர் அழைக்கப்பட்டனர். அவர்களது பிரசன்னத்தின் பின்பும் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.


இதனால் கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டதுடன், காவற்துறையினரின் பாதுகாப்புடன் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் மண்டபத்திலிருந்து வெளியேறி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More