Home இலங்கை யாழ். வேலணையில் சகதிக்குள் சிக்கியுள்ள மாணவர்கள் – விபத்துக்களும் அதிகரிப்பு!

யாழ். வேலணையில் சகதிக்குள் சிக்கியுள்ள மாணவர்கள் – விபத்துக்களும் அதிகரிப்பு!

by admin

யாழ்ப்பாணம் சரவணை பகுதியில் வீதி சகதியாக காணப்படுவதனால் விபத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சரவணை – ஊர்காவற்துறை வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் வேளையில், புனரமைப்பு பணிக்காக வீதியில் போடப்பட்ட மண் , மழை காரணமாக சகதியாக மாறியுள்ளது. 

இதனால் அப்பகுதியில் பயணிப்பவர்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நடந்து செல்வோர் பெரும் இன்னல்களை எதிர் கொண்டுள்ளனர். 

அதேவேளை வீதியில் சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் , சகதிக்குள் சிக்கி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே விரைந்து புணரமைப்பு பணிகளை முடிக்குமாறும், இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்துமாறும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More