Home இலங்கை படகுப்பாதை விபத்து – திருமலை MP தௌபீக்கின் வீடு தாக்கப்பட்டது!

படகுப்பாதை விபத்து – திருமலை MP தௌபீக்கின் வீடு தாக்கப்பட்டது!

by admin

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு பாதை  விபத்தில் மாணவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கோபமடைந்த மக்கள்,   திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலால் வீட்டின் கதவு, யன்னல்கள் மற்றும் அவற்றின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அத்துடன், பாரிய படலையும் விழுத்தி சாய்க்கப்பட்டுள்ளன. தாக்குதல்களால் ஏற்பட்ட சேத விபரங்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்தப் படகுப்பாதையை சீர்செய்து வழங்குமாறு பிரதேச மக்கள் இவரிடம் கேட்டதாகவும், செீரமைப்பதாக கூறி நீண்டகாலம் தாமதித்ததாகவும் மக்கள் விசனம் அடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More