Home இலங்கை சிறி VS டக்ளஸ் – பிரபாகரன் ஒரு போதைப்பொருள் வர்த்தகர் – டக்ளஸ் – அரசின் கால்களை நான் கழுவுபவன் அல்ல நான் – சிறிதரன்!

சிறி VS டக்ளஸ் – பிரபாகரன் ஒரு போதைப்பொருள் வர்த்தகர் – டக்ளஸ் – அரசின் கால்களை நான் கழுவுபவன் அல்ல நான் – சிறிதரன்!

by admin


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு போதைப்பொருள் வர்த்தகர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (23.11.21) நடைபெற்ற ஜனாதிபதி, பிரதமருக்கான செலவினத் தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் உரைக்கு குறுக்கீடு செய்து டக்ளஸ் இதனைக் குறிப்பிட்டள்ளார்.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கில் போதைப்பொருளின் பாவனை அதிகரித்துள்ளதாக சிறிதரன் உ உரையாற்றிக்கொண்டிருந்தபோது, குறுக்கீடு செய்த அமைச்சர் டக்ளஸ், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு போதைப்பொருள் வர்த்தகர். அவர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார். இது சிறிதரனுக்கு தெரியுமோ தெரியாது.

சிறிதரன் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த போது சில விடயங்களை வடக்குக்கு செய்ததாக ஏற்றுக்கொள்கின்றார். அதற்கு முன்னர் ஏன் செய்யப்படவில்லை என்று கேட்கிறார். அதற்கு முன்னர் செய்ய அங்குள்ளவர்கள் விடவில்லை தடைகளை ஏற்படுத்தினார்கள் எனவும் தெரிவித்தார்.

டக்ளஸின் பேச்சால் கொதிப்படைந்த சிறிதரன், நான் அரசுக்கு வக்காலத்து வாங்கும் கையாள் அல்ல. அரசினது கால்களைக் கழுவும் வேலையும் செய்பவனல்ல. அல்லது உயிருக்கு பயந்து கவச வாகனங்களில் பயணிப்பவனுமல்ல. தமிழர்கள் எதற்கும் துணிந்தவர்கள் எனவும்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More