Home இலங்கை படகு கவிழ்ந்து விபத்து – மீனவரைக் காணவில்லை

படகு கவிழ்ந்து விபத்து – மீனவரைக் காணவில்லை

by admin

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் படகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒருவர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ள தாக தொிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (23) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் விழ்ந்து விபத்துக்குள்ளான படகு செட்டிபாளையம் கடல் ரையில் கரை ஒதுங்கியுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

மட்டக்களப்பு திரைமடு சுவீஸ் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சுந்தரராஜா சுரேஸ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த மீனவர் நேற்று மாலை இயந்திர படகில் தனியாக முகத்துவாரம் கடலில் மீன்பிடிப்பதற்கு சென்றநிலையில் கடலில் இருந்து வலையை இழுக்கும் போது படகு கவிழ்ந்ததாகவும் இதனையடுத்து அவர் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

கவிழ்ந்த படகு செட்டிப்பாளையம் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள நிலையில் காணாமல் போனவரை கடற்படையினர் தேடிவருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More