Home இலங்கை மைத்திரிக்கும் “கடுங் கோபம்” வந்திட்டுதாம்!

மைத்திரிக்கும் “கடுங் கோபம்” வந்திட்டுதாம்!

by admin

அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மீது, ஆளும் தரப்பின​ரே பொய்யான குற்றச்சாட்டுகளை கடுமையான முறையில் முன்வைக்கின்றனர் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்திருந்தால்தான் அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என ஞாபகமூட்டியு்ள்ளார்.

சுதந்திரக் கட்சியின் மீது சேறுபூசும் செயற்பாடுகள் பாரதூரமானவை என்றும் குறிப்பிட்ட அவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 14 பேர், அரசாங்கத்துக்குள் இருப்பதையும் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டுமென அரசாங்கத்துக்கு வலியுறுத்தி உள்ளார்.

அத்துடன், தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பயன்படுத்திய வாகனங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் கடுந்தொனியில் பதிலளித்ததாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More