Home இலங்கை 6 நாடுகளிலிருந்து இலங்கை செல்லும் பயணிகளுக்கு தடை

6 நாடுகளிலிருந்து இலங்கை செல்லும் பயணிகளுக்கு தடை

by admin

6 நாடுகளிலிருந்து இலங்கை செல்லும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய 6 நாடுகளிலிருந்தே இவ்வாறு இலங்கைக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையானது எதிர்வரும் 14 நாட்களுக்கு விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த நாடுகளிலிருந்து யாரேனும் சென்றிருந்தால் அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால்   “ஒமிக்ரோன்” (OMICRON) என பெயாிடப்பட்ட புதிய வகை வீாியம் மிக்க கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More