Home இலங்கை வடக்கில் வெடித்து சிதறும் எரிவாயு அடுப்புக்கள் – யாழிலும் , கிளிநொச்சியிலும் சம்பவங்கள்!

வடக்கில் வெடித்து சிதறும் எரிவாயு அடுப்புக்கள் – யாழிலும் , கிளிநொச்சியிலும் சம்பவங்கள்!

by admin

 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது , எரிவாயு அடுப்புக்களும் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.  சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவம் நேற்றைய தினம் அம்பாறை சாய்ந்த மருது பகுதியிலும் பதிவாகி இருந்த சம்பவத்துடன் இந்த மாதத்தில் மாத்திரம் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 


 இன்றைய தினம் புத்தளம் ஆராய்ச்சி கட்டுவ பகுதியிலும் சிலிண்டர் தீப்பிடித்த நிலையில் , அதனை அணைக்க முற்பட்டவர்கள் , அது அணையாத நிலையில் அதனை அருகில் இருந்த நீர் நிலைக்குள் தூக்கி வீசியுள்ளனர். அதனால் சிலிண்டரில் வெடிப்பு ஏற்படாததால் , பாரிய அனர்த்தம் தவிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் வடக்கில் எரிவாயு அடுப்புக்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. 
நேற்றைய தினம் சனிக்கிழமை கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறி இருந்தது , இன்றைய தினம் யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. 


கந்தரோடை வீட்டில் எரிவாயு சிலிண்டர் சமையல் அறைக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்தமையால் , அடுப்பு வெடித்து தீ பிடித்த போது பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More