Home இலங்கை ‘நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே’ – வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்

‘நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே’ – வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்

by admin

காணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என வடக்கு ஆளுநர் கூறியதாக வெளியான செய்தியை அடுத்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 


வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து  கொண்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். 
நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே, எமது நிலம் எமக்கு வேண்டும்,காணிகளை சுவீகரிக்கதே, ஆளுநரே காணி அபகரிப்புக்கு உடந்தையாகாதே  போன்ற பல்வேறு கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பபட்டது.


போராட்டம் இடம்பெற்ற அப்பகுதியில் காவல்துறையினம்,  இராணுவத்தினரும்,  புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More