Home இலங்கை 11 குற்றச்சாட்டுகளிலிருந்து ரவி கருணாநாயக்க உள்ளிடோா் விடுதலை

11 குற்றச்சாட்டுகளிலிருந்து ரவி கருணாநாயக்க உள்ளிடோா் விடுதலை

by admin

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக தொிவிக்கப்பட்ட 22 குற்றச்சாட்டுக்களில் 11 குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 10 பேரை மூவரடங்கிய நீதாய நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கதொடா்பில் ஆட்சேபனையை முன்வைத்த பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள், பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தொடர முடியாத காரணத்தினால் அவர்களை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்குமாறு நீதிமன்றில் கோரியிருந்ததன் அடிப்படையில் குறித்த 11 குற்றச்சாட்டுக்கள் மீது தொடர்ந்து வழக்கு நடத்த முடியாததால் அவற்றில் இருந்து பிரதிவாதிகளை விடுதலை செய்வதாக நீதிமனற்ம் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வழக்கை ஜனவரி மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More